search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் வாடகை வீட்டில் விபசாரம்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் வாடகை வீட்டில் விபசாரம்

    • பெண் புரோக்கர் கைது
    • ரூ 11,500 பணம் பறிமுதல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக நேசமணி நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் இளம் பெண் ஒருவர் வாலிபருடன் அரைகுறை ஆடையுடன் இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் குமரி மேற்கு மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    பிடிபட்ட வாலிபர் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன்சன் (வயது 38 )என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கு புரோக்கராக செயல்பட்ட வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வி என்பவரும் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்து ரூ 11,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர் .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் மூலமாக வாலிபர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    ரூ.1000முதல் ரூ. 2000 வரை அழகியுடன் உல்லாசமாக இருப்பதற்கு பணம் கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    மேலும் வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் சிலர் வந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×