என் மலர்
உள்ளூர் செய்திகள்

நவராத்திரி விழாவில் பங்கேற்க சுவாமி விக்ரகங்கள் பவனி
- பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனி
- வருகிற 12-ந்தேதி நடக்கிறது
நாகர்கோவில் :
தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகராக பத்மனாபபுரம் இருந்தபோது அரண்மனை யில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. பின்னர் தலைநகர் திரு வனந்தபுரத்திற்கு மாற்றப் பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்த புரம் அரண்ம னைக்கு மாற்றப் பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னு தித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு நவராத்திரி விழா தொடங்குவதை யொட்டி சாமி விக்ரகங்கள் வருகிற 12-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 11-ம் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைகிறது.
12-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.
அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் தொடங்கும். முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் பூஜை யில் வைக்கப்பட்டிருக்கும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 12-ந்தேதி காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறும் என தெரி விக்கட்டுள்ளது. நிகழ்வு களில் இருமாநில அமைச்சர் கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை, வேளிமலை முருகன் ஆகி யோர் வீற்றிருக்க பெண் களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். அப்பவ னியானது கேரளபுரம், ராஜபாதை, பழையபள்ளி வழியாக திருவிதாங்கோடு சென்று அழகியமண்டபம் சென்று இரவு குழித்துறை சென்றடைகிறது. 13-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றடையும். 14-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடை கிறது.
அங்கு தொடங்கும் நவ ராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரிய சாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலிலும் பங்கேற்கின்ற னர். பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து புறப்பட்டு 28-ந்தேதி பத்மனாபபுரம் வந்தடைகின்றன.






