என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்தாமரைக்குளம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.
- தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் அருகே உள்ள இடையன்வி ளையை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 22).
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சதீஷ்குமார், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பணம் கொடுக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.
இதை பார்த்த குடும்பத்தினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பின்னர் மீண்டும் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து அவரது தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்