என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் கடல் சீற்றத்தால் மணற்பரப்பு மூடியது - கடற்கரை வெறிச்சோடியது
- பொதுமக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம்.
- குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கடல் நீர் மூடிய மணற்பரப்பில் உட்கார முடியாமல் திரும்பி சென்றனர்
கன்னியாகுமரி :
குளச்சல் கடற்கரையில் தினமும் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம்.
அவர்கள் கடற்கரை காற்றில் மாலை சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை ரசித்துவிட்டு செல்வர். சிலர் மணற்பரப்பில் குடும்பம்குடும்பமாக அமர்ந்தும், 'செல்பி' எடுத்தும் களிப்புற்று செல்வர்.
இந்நிலையில் குளச்சல் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சீற்றம் காரணமாக அலை நீர் மணற்பரப்பு முழுவதும் பாய்ந்து மணற்பரப்பை மூடி உள்ளது.நேற்று மாலை குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கடல் நீர் மூடிய மணற்பரப்பில் உட்கார முடியாமல் திரும்பி சென்றனர்.சிலர் அலை தடுப்பு சுவர் கற்கள் மீது அமர்ந்து கடலை ரசித்து சென்றனர்.
விடுமுறை நாளில் நேற்று பொழுது போக்க குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் திரும்பி சென்றதால் கடலை, பொரி, ஐஸ் வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்