search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரியில் நகரிய தங்கும் விடுதி
    X

    நகரிய தங்கும் விடுதி சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    கன்னியாகுமரியில் நகரிய தங்கும் விடுதி

    • ரூ.20 லட்சம் செலவில் சீரமைப்பு
    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான நகரிய தங்கும் விடுதி கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரே அமைந்து உள்ளது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு வசதியாக இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுஉள்ளது. இந்த தங்கும் விடுதியை பேரூராட்சியில் இருந்து ஏலத்தின் மூலம் எடுத்து தனியார் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தங்கும் விடுதி செயல்படாத நிலையில் இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த தங்கும் விடுதியை சீரமைத்து மீண்டும் ஏலம் விட பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்ததங்கும்விடுதியில் ரூ.20 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இந்த நகரிய தங்கும் விடுதி சீரமைப்பு பணி தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த பணியை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், இள நிலை பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகா தார அலுவலர் முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனிரோஸ்தாமல், இக்பால் மற்றும் தி.மு.க. நிர்வா கிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×