search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் காதல் மனைவி கொலை-தலைமறைவான கணவரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்
    X

    கன்னித்தாய்

    தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் காதல் மனைவி கொலை-தலைமறைவான கணவரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்

    • இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
    • தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க 2தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ். இவருடைய மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி.

    காதல் மனைவி கொலை

    இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கதிஜா பிஸ்மி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்றும் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர் கன்னித்தாயை கொன்றது தெரியவந்தது.

    இதற்கிடையே தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், முத்தையாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் விசாரணையில் அவர் தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×