search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
    X

    வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்தனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கங்காணி சந்தை சேர்ந்தவர் நாகவேல்மணி (32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைத்தியநாதபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல், நாகவேல்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப்பாளையம் ஜான் மகன் சக்தி கவுதம் (23), வைத்தியநாதபுரம் சுரேஷ் மகன் சஞ்சய் (22), பாரதியார் மெயின் ரோடு செந்தில்குமார் மகன் அஜித் குமார் (24), கங்காணி சந்து கண்ணன் மகன் மாயகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரை எம்.எம்.சி. காலனி, காவிரி நகரை சேர்ந்தவர் யுவராஜா (26). இவர் நேற்று மாலை செம்பூரணி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300-ஐ பறித்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் போஸ் மகன் ராமகிருஷ்ணனை (19) கைது செய்தனர்.

    Next Story
    ×