search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் ஆய்வு
    X

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் ஆய்வு

    • அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரை

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. அதற்கான பணிகள் தொடங்கியது.

    தடுப்பு கம்புகள் ஊன்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் ''கலெக்சன் பாயிண்ட்'' உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும்? என்பது குறித்து இன்று கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாடிவாசலின் இரு புறமும் தடுப்பு கம்புகள் கட்டும் பணியை, கலெக்சன் பாயிண்ட் வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆய்வில் கலெக்டருடன் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மாநகர போலீஸ் துணை ஆணையாளர் (தெற்கு) சாய் பிரனீத், உதவி ஆணையாளர் செல்வ குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், உதவி பொறியாளர் செல்வ நாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா, மண்டத் தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அவனியாபுரம்- முத்துப்பட்டி சந்திப்பில் இருந்து வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யுமிடம், மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளும் இடம், கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சுமார் 2 கி.மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டி யில் நடைபெற்ற குளறுபடிகள், உயிரிழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் துணை கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×