search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
    X

    பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

    • வேலை-கடன் வாங்கித்தருவதாக நூதனமாக பேசி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

    இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த காயத்ரி செல்போ னில் பேசிய நபருடன் பேச முயன்றார். ஆனால் பலனில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காயத்ரி புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அரசூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் கூறியுள்ளார். இதற்காக ராமசாமி அவருக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றபின் வேலை வாங்கித்தரவில்லை.

    இதையடுத்து ராமசாமி பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது, ரூ.2½ லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜா மற்றும் உடந்தையாக இருந்த வெங்கடேசன் என்பவர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×