search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கேரள லாரி டிரைவர்-  மூதாட்டி பரிதாப சாவு
    X

    லாரி டிவைர் திலீப்குமார்

    கேரள லாரி டிரைவர்- மூதாட்டி பரிதாப சாவு

    • கேரள லாரி டிரைவர்- மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    கேரள மாநிலம் கொல்லம் லேபர் காலனியை பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(வயது42). இவர் சென்னை தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லாரியை சென்னையில் விட்டுவிட்டு கொல்லத்திற்கு வரும்போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதிக்கு வந்து உள்ளார்.

    ஆலம்பட்டி பகுதியில் திலீப்குமார் நடந்து வந்து கொண்டிருந்தபோது பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் இருந்து திருமங்க லம் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் பரம்புபட்டி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தது யார்? என்றும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×