என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வருகை
- கொடைக்கானல் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வந்தார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் வருகிறார். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வத்தலக் குண்டு வழியாக கொடைக்கா னலுக்கு மாலை 4.30 மணிக்கு செல்கிறார். எனவே மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இன்று இரவு கொடை க்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார்.
பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை வரும் கவர்னர், இங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கா னலுக்கு செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது. கவர்னர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. மதுரை வி மான நிலையம் மற்றும் கவர்னர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் ேடாங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்