search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
    X

    லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

    • சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாமாக உயிரிழந்தார்.

    பூதலூர்:

    உத்திரபிரதேசமாநிலம், கண்ணோஜ் மாவட்டம், காஞ்ச்பட் கிராமத்தைச் சேர்ந்த தரம்வீர் (வயது24) என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தங்கி இருந்து ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனது நண்பர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டர் சைக்கிள் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி சாலையில் புதுப்பட்டி தட்டாங்குளம் அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடைய சகோதரர் ஆகாஷ் பூதலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×