search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படகு இல்ல சாலையில்பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
    X

    படகு இல்ல சாலையில்பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

    • பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி படகு இல்லத்திற்க்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நீலகிரியில் இருந்து ஊட்டி படகு இல்லத்திற்க்கு ெசல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஊட்டி நகராட்சியில் பல பகுதிகளில் இந்த அவல நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×