என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    • ராமச்சந்திரன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமச்சந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த வீரணாபுரம் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 22).

    இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராமச்சந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×