search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாகக் குழு தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்கிறது
    X

    ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாகக் குழு தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்கிறது

    • 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
    • அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

    ஊட்டி,

    ஊட்டி கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாக குழுவுக்கான தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்க உள்ளது.

    இதற்கான வேட்புமனு படிவங்கள் சங்க வளாகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் இதற்கென நியமனம் செய்யப்பட்ட அலுவலா் மற்றும் ஊட்டி மண்டல துணை தாசில்தாா் ஆகியோரிடமிருந்து நவம்பா் 9-ந் தேதி காலை 10 மணி முதல் 10-ந் தேதி மாலை 5 மணி வரை பெற்று கொள்ளலாம். இளம் படுகா் சங்கத்தில் நிா்வாகக் குழுவின் தலைவா், 2 துணைத் தலைவா்கள், செயலாளா், பொருளாளா், 6 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆகிய 11 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஒரு உறுப்பினா் ஒரு பதவிக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இது திரும்ப வழங்கப்படாது. 2011-2012-ம் நிதியாண்டின் இறுதி நாள் வரை சோ்ந்த உறுப்பினா்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்கலாம்.

    பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் இதற்காக நியமனம் செய்யப்பட்ட உதவி தோ்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

    இளம் படுகா் சங்க கட்டிடத்தில் வருகிற 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

    தோ்தல் தொடா்பாக எழும் கோரிக்கைகள், முறையீடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோட்டாட்சியரின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×