search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை எண்ணத்தை தவிர்க்க குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் நல்ல விஷயங்களை கற்று கொடுக்க வேண்டும்-  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சு
    X

    கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசிய போது எடுத்த படம்.

    தற்கொலை எண்ணத்தை தவிர்க்க குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் நல்ல விஷயங்களை கற்று கொடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சு

    • இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது.

    ஆறுமுகநேரி:

    இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது. இதற்கான காரணங்களில் கோபம் மிக முக்கிய ஒன்றாகும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை கட்டு படுத்தினால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும். உடலை ஆரோக்கிய மானதாக வைத்து கொள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். நீங்களும் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்று கொடுத்து அவர்களை எந்த சூழ்நிலையிலும் பிரச்சி னைகளை தைரியத்துடன் அணுக ஊக்கப்படுத்துங்கள். தோல்வியை கண்டு சோர்வைடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டு என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும். ஆகவே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையோடு பொது நலத்தையும் கற்றுகொடுத்து வெற்றி யாளர்களாக மாற்றுவது பெற்றோர்களது கடமை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 2000 மரக்கன்றுகளும், மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன. இதனை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடை யப்பன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன், திருச்செந்தூர் தொழில்துறை ஆய்வாளர் ஜோதிலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன், தன்னார்வ தொண்டு தனி அலுவலர் ராமச்சந்திரன், பகுதி பொறுப் பாளர்கள் பிரேமா, ஆறுமுகவடிவு, முத்துச்செல்வன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம உதயம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுந்தேரசன், நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×