என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு கோவிலில் பட்டின பிரவேச விழா
- சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
- சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.
களக்காடு:
களக்காடு சத்தியவா கீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடர்ச்சியாக பட்டிட பிரவேச விழா நடந்தது.
இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தனர். சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை களக்காடு பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.
Next Story






