search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்-அர்ஜூன் சம்பத் பேச்சு
    X

    பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்-அர்ஜூன் சம்பத் பேச்சு

    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம்,
    • அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கோவை,

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன்ச ம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமுருகன் மற்றும் மலுமிச்சம் பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:-

    கோவையில் அ.தி.மு.க. கொண்ட வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்தி உள்ளனர். நீட் தேர்வை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. மோடி சமூகத்தை அவதூறாக பேசியதால் ராகுல்காந்தியின் பதவி பறிபோனது. பொய்யான வரலாறுகளை கூறுபவர்கள் தி.மு.க.வினர்.

    கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்து அமைப்புகளும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். அதில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக வருவாக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மோடி ஆட்சியை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நல்லாம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் மாதம் மேற்கொள்ள உள்ள நடைபயணத்துக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.

    மதம் மாறியவர்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×