search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாக்கோட்டையில், நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    மாதாக்கோட்டையில், நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்.
    • அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் உள்ள கபிரியேல் மக்கள் மன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முகாமை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    மேலும் தஞ்சை கோட்டத்தில் உள்ள ஒரத்தநாடு புதூரில் இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதியும், திருவையாறு அடுத்த கண்டியூரில் 12-ந்தேதியும், மேலத்திருப்பந்துருத்தியில் ஜனவரி 20-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணத்தை அடுத்த கீழக்கோட்டையூரில் வருகிற 26-ந்தேதியும், திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை கீழ மருத்துவக்குடியில் ஜனவரி 6-ந்தேதியும், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரியில் 10-ந் தேதியும், திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பகுதியில் ஜனவரி 5-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் மதுக்கூர் ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலத்தில் வருகிற 28-ந் தேதியும், பேராவூரணி ஒன்றியம் ஆலத்தூரில் 31-ந் தேதியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் ஜனவரி 4-ந் தேதியும், பட்டுக்கோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்ல பிராணிகளுக்கு முகாம் நடைபெறும் இடங்களை அணுகி இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொடியநோயில் இருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×