search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாகல்யாண மகோத்சவ விழா
    X

    மகோத்சவ விழா நடந்தது.

    ராதாகல்யாண மகோத்சவ விழா

    • இன்னிசை நிகழ்ச்சி, நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.
    • விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் வடக்குராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 68-ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவம் மற்றும் ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் நூற்றாண்டு விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    விழாவின் கடைசி நாளில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை, திவ்யநாம பஜனை, மதியம் பலராமகன்பாகவதர், சுப்ரமணிய பாகவதர் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீ ராதாகல்யாண மகோற்சவம் நடைபெற்றது.

    மாலையில் ஸ்பூர்த்திராவ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், கடையநல்லூர் ராஜகோபால்தாஸ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

    Next Story
    ×