என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியனேந்தல் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா
- ஜனாதிபதியிடம் விருது பெற்ற அரியனேந்தல் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.
- பரமக்குடி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவில் மணிமுத்து கவுரவிக்கப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அரியனேந்தல் ஊராட்சியில் கழிவு நீரை சுத்திகரிப்பு, மறுசுழற்சி செய்து இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மைக்கான சிறந்த ஊராட்சி என அரியனேந்தல் ஊராட்சி விருது பெற்றுள்ளது. இந்த விருதினை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெற்றார். அவருடன் அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து கலந்து கொண்டார். இைதயடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவுக்கு பாராட்டு விழா நடந்தது.
பரமக்குடி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவில் மணிமுத்து கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து அரியனேந்தல் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரயு ராஜேந்திரன், ஆணையாளர் உம்முல் ஜாமியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் செட்டியப்பன் தொகுத்து வழங்கினார். விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரயு ராஜேந்திரன் ஆகியோரை வாழ்த்தி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், கிராம மக்களும் பேசினர். விழாவில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாப்பா சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், கோகுலம் சேம்பர் உரிமையாளர் சண்முகம், கவுன்சிலர்கள் குமார், சண்முகவேல், சண்முகம், ராமசாமி, கோபால் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அரியனேந்தல் ஊராட்சி செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.






