என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம்
- தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை பல்லாக்குஒலியுல்லா குடியிருப்பு பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள், தாங்கள் வளர்த்த பாரியை தலையில் சுமந்து கிராமத்தைச் சுற்றி மேளதாளத்துடன் வந்தனர். பின்னர் அதனை கடலில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






