search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
    X

    வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

    • ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 83-வது பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, திரு மஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றி தீபாராதனை காண்பித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றம் நடந்து முடிந்தபின் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவில் வருகிற 5-ந்தேதி காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    அங்கு காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடிகளுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு கோவில் முன்பு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×