என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- கமுதி கோட்டைமேட்டில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.
பசும்பொன்
ராமநாத புரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மீனவ கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி ஈசன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறன் மேம் பாட்டு வகுப்புகளை ஆய்வு செய்தனர். 90 நாட்கள் உணவு, உறைவிடம், ஊக்க தொகை மாதம் ஆயிரம் உள்ளிட்டவை பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.
Next Story






