search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம், கீழக்கரையில் திடீர் மழை
    X

    ராமநாதபுரம், கீழக்கரையில் திடீர் மழை

    • ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    Next Story
    ×