என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 7 ½ பவுன் நகை பறிப்பு
By
மாலை மலர்24 Dec 2022 3:58 PM IST

- சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 7 ½ பவுன் நகை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், சம்பவத்தன்று சேனைபாளையம் அருகே உள்ள பூவரசன் கோட்டை சுந்தர பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வையாபுரியை வழிமறித்து கத்தியால் கையில் வெட்டியது. மேலும் வையாபுரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, 1/2 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து வையாபுரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
X