என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கும் விடுதி உரிமையாளரை மிரட்டிய ரவுடி கைது
- நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி சாலையில் வசித்து வருபவர் முருகன் (வயது 54). தங்கும் விடுதி உரிமையாளர். கடந்த 26-ந் தேதி இரவு இவர் தங்கும் விடுதி முன்பு இருந்த போது அங்கு வந்த ஒருவர் முருகனுடன் தகராறு செய்தார். இது குறித்து கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முருகனை மிரட்டியவர் பெயர் வெள்ளைசாமி (வயது 41), ஊத்தங்கரை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான வெள்ளைசாமி பிரபல ரவுடி ஆவார். ஊத்தங்கரை மற்றும் நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






