என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
- ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது.
- கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
சேலம்:
ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 41). இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது. இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த கொடுமை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.