search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
    X

    பேட்டை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 

    பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

    • வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இப்பணி நடைபெறும்.

    பள்ளி செல்லா குழந்தைகள் 6 முதல் 18 வயது வரையிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5 முதல் 18 வயது வரையிலும் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கணக்கெடுப்பு பணியை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலன், ஆசிரிய பயிற்றுநர்கள் ஸ்ரீதரன், சுரேஷ், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சிங்காரவடிவேல் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா கூறுகையில்:-

    6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் இக்கணக்கெடுப்பு பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×