search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காட்டாங்கொளத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
    X

    காட்டாங்கொளத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

    • சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
    • சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் பிரபு. நேற்று இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்துக்கு பிரபு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பாம்பு இருக்கும் இடத்தை தேடினார்கள்.

    சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    Next Story
    ×