search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தீபாவளியை யொட்டி திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்
    X

    தீபாவளியை யொட்டி திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

    • திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுகிறோம்.
    • கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியு ள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருகிறது.

    ராமநாதபுரம், காரை க்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோ ட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதி யிலிருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாள ர்கள், மாணவ மாணவிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சென்ற ஆண்டு சிறப்பு ரயிலை இயக்கியது போல் (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் வண்டி எண் 06041/06042) இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டு க்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ரயில் தடத்தின் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுகிறோம்.

    இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×