என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி
- வாஞ்சிநாதர் மங்காளம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்மராஜா மற்றும் வாஞ்சிநாதரை தரிசித்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாலாளையம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் தற்போது புனரமைக்க வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர் மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அசுர தேவர் சுவாமி குப்த கந்தையில் வைத்து அபிஷேகம் செய்தனர்.
ஆனால் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும் காவல் துறை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.






