search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ்  ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
    • மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகவேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது மக்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி

    வேலூர் டி.எஸ்பி கலை யரசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×