என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் நள்ளிரவில் பேன்சி கடையில் திடீர் தீ- பொருட்கள் எரிந்து நாசம்
    X

    பேன்ஸி கடையில் தீ கொழுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் நள்ளிரவில் பேன்சி கடையில் திடீர் தீ- பொருட்கள் எரிந்து நாசம்

    • பெரியசாமி சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.
    • நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 70). இவர் சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியா பாரத்தினை முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார்.

    திடீர் தீ

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரது கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், அரிராம், பூவர்ண தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது.

    விசாரணை

    மேலும் தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, இப்பகுதியில் சிலர் மது மற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் யாரேனும் தீவைத்து சென்று இருக்கலாம் என்று சந்தேம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

    Next Story
    ×