search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

    • நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
    • ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    தென்மண்டல பகுதிகளான, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்.

    சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×