என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணியில் உருட்டு கட்டையுடன் மோதல்- 2 பேர் கைது
    X

    திருத்தணியில் உருட்டு கட்டையுடன் மோதல்- 2 பேர் கைது

    • காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
    • இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    திருத்தணி:

    திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 38). இவர் தன் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு (32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இது குறித்து இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×