search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் விற்பனை செய்த 112 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    X

    அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த காட்சி.

    கடைகளில் விற்பனை செய்த 112 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

    • ரூ.27,500 அபராதம் விதிப்பு
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஆலங்கயாம்:

    வாணியம்பாடியில் மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆற்றுமேடு பகுதியில் உள்ள 2 கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.27,500 அபராதம் விதித்தனர்.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

    சுற்றுச்சூழல் பாதுபாப்பு சட்டத்தின்படி கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சோதனையின்போது நகராட்சி துப்புறவு ஆய்வாளர் செந்தில்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×