search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
    X

    ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீட்டை அகற்றினர்.

    ஜோலார்பேட்டையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

    • உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
    • போலீசார் பாதுகாப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சுண்ணாம்புகாளை பகுதியில் உள்ள தெருக்களில் நக ராட்சி நிர்வாகம் சாலை வச திக்காக ஒதுக்கிய பகுதிகளில் சிலர் சாலைகளை ஆக்கிர மித்து குடியிருப்புகள் கட்டியி ருந்தனர். இதனால் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து அதே பகு தியை சேர்ந்த தனி நபர் ஒரு வர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பு களை அகற்ற கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப் பாளர்கள் அவர்களாகவே அதனை அகற்றிக்கொள்ள காலக்கெடு விதித்து நோட் டீஸ் வழங்கப்பட்டது.

    ஆனால் சம்பந்தப்பட்டவர் -கள் அதனை அகற்றவில்லை . தொடர்ந்து அதனை கடந்த 3 மாதங்களுக்கு முன் பும்துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப் புகளை அகற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட் டார். அதன்பேரில் ஜோலார் பேட்டை நகராட்சி ஆணை யர் கோ.பழனி தலைமையில் நேற்று சுண்ணாம்புகாளை பகுதியில் சாலை ஆக்கிரமிப் புகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

    3 தெருக்களில் அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜோலார் பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகரமைப்பு ஆய் வாளர் நளினா தேவி, நக ராட்சி நில அளவையர் முரு கன் , கிராம நிர்வாக அலுவ லர் சிவக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பு உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தனர். இதனால் வாக்குவாதத் தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் தெருக்களின் சாலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    Next Story
    ×