என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்
    X

    கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்

    • 5 கடைகளில் 30 கிலோ பறிமுதல்
    • ரூ.2500 அபராதம்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கேசவன் தலைமையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சுமார் 5 கடைகளில் 30 கிலோ அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்க ப்பட்டது.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திடீர் சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ.2500 அபராதம் விதிக்க ப்பட்டது.

    மேலும் சில கடைகளுக்கு பிளாஸ்டிக்களை விற்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.

    மீண்டும் சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் துணை தலைவர் திருமால் ஊராட்சி செயலாளர் பாண்டியன், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×