search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் மாற்றுத்திறனாளி சாவு
    X

    பைக் விபத்தில் மாற்றுத்திறனாளி சாவு

    • நேருக்கு நேர் மோதியதில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 43 ), கண்பார்வை குறைபாடு உடையவர்.

    இவரது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர்.

    வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் தனியார் நூற்பாலை அருகே வந்த போது, இவர்களது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×