என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலாளர், பணி தள மேற்பார்வையாளர் சஸ்பெண்டு
- கூடுதல் கலெக்டர் உத்தரவு
- வீடுகள் கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டமடவு ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள திடீரென சென்றார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டதும் சில வீடுகளுக்கு கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டமடுவு ஊராட்சி செயலாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வாசு உள்ளிட்டவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






