search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசு மாணவி
    X

    கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசு மாணவி

    • கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்
    • வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார்

    மணப்பாறை:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழா 2022-23க்கான போட்டிகள் ஓவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி யோகப்பிரியா முதலிடம் பிடித்தார். மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தமிழாசிரியை எழிலரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமைஆசிரியை லீமா ரோஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


    Next Story
    ×