என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் நகை பறிப்பு
- வாலிபரிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்
- பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்
திருச்சி:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 27) சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த ஒரு மர்ம ஆசாமி பெரியசாமி கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இதுகுறித்து பெரியசாமி திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






