என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
1½ வயது குழந்தையை கொன்றதாய்மாமனுக்கு ஆயுள் தண்டனை
- முசிறி அருகே சொத்து தகராறில் சம்பவம்
- திருச்சி கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பு
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆமூர் கல் யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் முருகையா. இவ–ரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு சாதனாஸ்ரீ (வயது 1½), சஞ்சனாஸ்ரீ (வயது 1½) ஆகிய இரட்டைக்குழந்தைகள் இருந்தனர்.இதற்கிடையே சஞ்சனா–ஸ்ரீ தனது பெற்றோருடனும், சாதனாஸ்ரீ சுபாஷினியின் தந்தையான ஆமூர் சடை–யப்ப நகரில் உள்ள சாமி–தாஸ் வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.இந்தநிலையில் சுபாஷி–னியின் தந்தை சாமிதாசுக்கும், அவரது மகன் லோகநாதனுக்கு சொத்துக் களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது. மேலும் லோகநாதன் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களை தனது சகோதரி சுபாஷினியின் மகள் சாதனாஸ்ரீக்கு எழுதி வைத்துவிடுவாரோ என்ற பயம் இருந்தது. அத்துடன் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்வதை விட, சாதனாஸ்ரீயை பராம–ரிப்பதிலேயே சாமிதாஸ் அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் கடந்த 31.12.2018 தனது சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அதே நாளில் தாத்தா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாதனாஸ்ரீயின் கழுத்தை பிடித்து தூக்கி கட்டிலில் அடித்தார்.பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 4.1.2019 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த முசிறி போலீசார் லோகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் அரசு வழக்கறிஞராக கே.பி.சக்திவேல் ஆஜரா–னார்.வழக்கு விசா–ரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பி.செல்வ–முத்துக் குமாரி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் 1½ வயது குழந்தையை சொத்து தகராறில் கொடூரமாக கொலை செய்த லோக–நாதனுக்கு ஆயுள் தண்ட–னையும், ரூ.3 ஆயிரம் அப–ராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து லோக–நாதனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்