என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஒரு புதிய விமான சேவை
- திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஒரு புதிய விமான சேவை தொடங்குகிறது.
- வளைகுடா நாடுகளுக்கு செல்லூம் பயணிகளுக்காக
திருச்சி:
திருச்சி விமான நிலைய த்திலிருந்து மலேசியா சிங்கப்பூர் துபாய் மஸ்கட் ஓமன் அபுதாபி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்றுவருவது வாடிக்கை இவர்கள் போதுமான விமான சேவை இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றனர் இதனால் இலங்கையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமான சேவையானது போதுமான இருக்க இல்லாத காரணத்தினால் பொதுமக்கள், பயணிகள் பெரும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான புதிய சேவையை இயக்குவதற்காக பிட்ஸ் ஏர் எனும் நிறுவனம் குளிர்கால அட்டவணையில் நேரம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்திருந்தது இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்குவதற்காக நேரம் ஒதுக்கீடு செய்து விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் பிட்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் டிசம்பர் 8ம் தேதி முதல் வியாழன் சனி ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் விமான சேவைகளை இயக்க உள்ளது வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 11 .25 மணிக்கு வந்து சேரும் மீண்டும் திருச்சியில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1.25 மணிக்கு கொழும்பு விமானத்தை சென்றடையும் எனவும் சனிக்கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1.45 மணிக்கு திருச்சி விமானநிலையத்தை வந்தடையும் எனவும் மீண்டும் திருச்சியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு 3.45 மணிக்கு இலங்கை சென்றடையும்.
எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கு திருச்சி விமான நிலை யத்தை வந்தடையும் எனவும் மீண்டும் 11.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு இலங்கை சென்று அடையும் என அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






