search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரி மனு
    X

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரி மனு

    • மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

    திருச்சி:

    அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் திருச்சி துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர் பொன்.ரவி என்கிற பெருமாள் ஆகியோர் மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டுக்கு டோக்கனுக்கு ரூ.1,000 பெற்றுக் கொண்டனர். நான் 2 ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு ரூ.2,000 கொடுத்து டோக்கன் கேட்டோம். அதற்கு 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்கள்.பின்னர் திடீரென தேதி மாற்றப்பட்டு கடந்த 8-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கு டோக்கன் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும்படி புதுக்கோட்டை கலெக்டர் அறிவித்தார். அதன்படி விண்ணப்பித்து அரசின் முத்திரையுடன் 200-வது டோக்கன் எங்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால் போட்டி நடைபெற்ற அன்று தங்கள் விருப்பம் போல மாடுகளை வாடிவாசலில் அவிழ்த்து விட்டனர். இதனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆன்லைன் டோக்கன் முறையால் ஏழை விவசாயிகளுக்கு தங்களது காளைகளை களமிறக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.ஆகவே இனிமேல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் விண்ணப்பத்தை ரத்து செய்து பழைய முறையிலேயே டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் வழங்குவதில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் சாதாரண மாட்டு உரிமையாளர்களுக்கு டோக்கன் போய் சேர்வதில்லை.ஆகையால் ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவரை நியமித்து ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்க வேண்டும். ஜாதிய அடையாளங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×