என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்; கூட்டத்தில் தீர்மானம்
- ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
- ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .
இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்