என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அடையாளம் தெரியாத ஆண் பிணம் அடையாளம் தெரியாத ஆண் பிணம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/22/1795657-2-death-body.jpg)
X
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
By
மாலை மலர்22 Nov 2022 12:55 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து குப்புச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசார் அடை யாளம் தெரியாத நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X