என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

    5 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

    • போலீசார் விசாரணை
    • பூட்டிய வீடுகளில் புகுந்து துணிகரம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ெரயில்வே மேம்பாலம் சக்தி நகரை சேர்ந்தவர் திருமால் நாதன். வியாபாரி.

    இவரது மனைவி துளசி அங்கன்வாடி பணியாளர் இவர்கள் கடந்த 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் 1 ½ பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்தனர். 4 பவுன் நகையை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் மதியழகன் தொழிலாளி. இவரது மனைவி செல்வி அங்கன்வாடி பணியாளர். இவர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    அப் போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ரொக்கம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அருகே உள்ள ராணுவ வீரர் உயர்ந்தவன் வீட்டில் நகை, ரூ.10, ஆயிரத்தை திருடி சென்றனர். இவரது தம்பி வீரன். இவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் அருகே உள்ள ஊரில் திருவிழா நடப்பதால் அங்கு சென்றனர்.

    இவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து மர்மகும்பல் 12 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×