என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே பெண் தற்கொலை
- முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி முத்து செல்வி (வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோயின் தாக்கம் குறையாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
கடந்த 27-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர் கோவில் தனியார் மருத்து வமனைக்கு முத்து செல்வி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






